Entertainment
Bigg Boss Freeze Task Rio Raj Family Enters The House
Published
2 weeks agoon
By
admin
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 12 வாரங்களை கடந்து இருக்கிறது இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி ,அர்ச்சனா ஆகிய என்று 8 பேர் வெளியேறி இருக்கின்ற நிலையில் நேற்றய நிகழ்ச்சியில் அனிதா சம்பத் வெளியேறி இருந்தார். , இந்த சீசன் நிறைவடைய இன்னும் ஒரு சில வாரங்களில் தான் எஞ்சி இருக்கிறது. இதனால் தான் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர் கூட டபுள் எவிக்ஷன் நடைபெற்றது. அதே போல இத்தனை வாரங்களை கடந்தாலும் பிக் பாஸ் வீட்டில் இதுவரை சுவாரசியமான டாஸ்ககும் கொடுக்கப்படவில்லை.
இப்படி ஒரு நிலையில் கடந்த திங்கள் கிழமை வாரத்தின் முதல் நாள் என்பதால் இந்த வாராதிக்கான நாமினேஷன் நடைபெற்று இருந்தது . இந்த வாரம் ஆரி தலைவர் ஆகி இருத்தால் அவரை இந்த வார நாமினேஷனில் இல்லை. இந்த வாரம் ஆஜீத், சோம், கேப்ரில்லா, ஷிவானி, ரம்யா ஆகியோர் நாமினேட் ஆகி இஇருக்கிறாரகள். இந்த வாரம் ஷிவானி அல்லது ஆஜீத் வெளியேற அதிக வாய்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்றைய நிகழ்ச்சியில் பாலாஜியை சந்திக்க அவரது சகோதரரும் சந்திக்க ஷிவானியை அவரது அம்மாவும் வந்திருந்தார்கள் இதில் உள்ளே வந்த ஷிவானியின் அம்மா சிவானி கண்டமேனிக்கு திட்டி தீர்த்து இருந்தார். உள்ளே சென்ற அவர் எதுக்கு இங்கே வந்த, இங்க நீ என்ன செய்தாலும் வெளியில் தெரியாது என்று நினைக்கிறாயா என்றுகேட்டு இருந்தார். இதை பார்க்கும் போது கடந்த சீசனில் ப்ரீஸ் டாஸ்கின் போது சென்ற லாஸ்லியாவின் தந்தை நினைவு தான் வருகிறது என்று ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் காலையில் வந்த முதல் ப்ரோமோவில் ரம்யா பாண்டியனின் சகோதரர் ‘இந்த வாரம் டபுள் ஏவிக்ஷன் இருந்து நீ வெளியேறினால் அதற்கு நீ காரணம் இல்லை’ என்று கூற அதற்கு பதிரிபோன ரம்யா பாண்டியன், நான் வெளியில் வரும் நிலை இருக்கா என்று பதறியுள்ளார். இப்படி ஒரு நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் ரியோ குடும்பத்தார் வந்து உள்ளார்கள். ஆனால், அவரது மகளை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஒரு சிறிய ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.