இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர். பல ஆச்சர்யத்தக்க சாதனைகளை தனது காலத்தில் நிகழ்த்தியுள்ளார்.அதிக நூறுகள் அடித்தவர் உள்ளிட்ட சாதனைகளைப் படைத்தவர். இவர் தேர்வுத்துடுப்பாட்டப் போட்டிகளில் மொத்தம் 34 நூறுகள் அடித்து சாதனை படைத்துள்ளார்.இந்தச் சாதனையானது 20 ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் இருந்தது. பின் டிசம்பர், 2005 இல் சச்சின் டெண்டுல்கர் இந்தச் சாதனையை முறியடித்தார்.
இப்படி பல சாதனைகளை புரிந்த கவாஸ்கரை கெளரவப்படுத்தும் வகையில் அவரது புகைப்படம் இன்று சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் திறந்து வைக்கப்பட்டது.
இந்த படத்தை முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி திறந்து வைத்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரின் படத்தை, சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி திறந்து வைத்துள்ளார்! #Sunnews | #indiancrickter | #SunilGavaskar | pic.twitter.com/zlvkKy6olA
— Sun News (@sunnewstamil) January 7, 2021
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரின் படத்தை, சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி திறந்து வைத்துள்ளார்! #Sunnews | #indiancrickter | #SunilGavaskar | pic.twitter.com/zlvkKy6olA
— Sun News (@sunnewstamil) January 7, 2021